தனுஷ் நடிப்பில் ‘மாரி’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரஜினி முருகன்’ என இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் மாரி படத்தின் இசை மே 25ம் திகதி வெளியாக உள்ளது.
ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூன்றும் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஜூலை 17ம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நாளில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் பொன் ராம் இயக்கத்தில் ’ரஜினி முருகன்’ படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் ‘மாரி’, ‘ரஜினி முருகன்’ படங்கள் வெளியாவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.