
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 24 பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சத் தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னாரிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை,நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்த மீனவப் படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.